business

img

பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க முடியாது... மக்கள் அனைவரும் சைக்கிளில் செல்லுங்கள்... கர்நாடக பாஜக எம்.பி. சொல்கிறார்....

பெங்களூரு:
பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே போகும் நிலையில், மக்கள் அனைவரும் சைக்கிளைப் பயன்படுத்துமாறு பாஜக எம்.பி. ஒருவர் பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலம் தாவனகெரே தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் சித்தேஷ்வர். இவர் ஞாயிறன்று தாவனகெரே வந்தபோது, அவரிடம் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அளித்த பதிலில்தான், “பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது. அத்துடன் சிக்கனமானது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன், எந்த நோயும் நம்மை அண்டாது” என்று உபதேசம் செய்துள்ளார்.

“சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்பவே, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது” என்று கூறியுள்ள அவர், தற்போது நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதால், வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் பெட்ரோல் - டீசல் விலையும் குறையும் என்றும் ஆரூடம் தெரிவித்துள்ளார்.பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று மோடிக்கே தெரியாத தகவலையும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

;